Wednesday, November 26, 2014

பிள்ளையார் பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரையின் ஓரத்திலே 
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் 
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

மண்ணினாலே செய்திடினும் 
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை 
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

அவல்பொரி கடலையும் 
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார் 
கண்ணைமூடித் தூங்குவார்

கலியுகத்தின் விந்தையை 
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே 
இஷ்டம்போல சுற்றுவார்

பிள்ளையார் பிள்ளையார் 
பெருமைவாய்ந்த பிள்ளையார்


No comments:

Post a Comment

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து கொள்ள இந்தச் சொற்ச்சொடரை நினைவில் வைக்கவும்.

"திருச்சி ந்தையில் வெல்லமும் புளியும் விற்ற செல்வன் ஞானியானன்"

திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

இது சூரிய உதயம் 6.00 A.M என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உள்ளூர் நேரத்திக்கேற்ப மாற்றி கணக்கிடவும்.